Breaking News
recent

மில்லத்நகர் மதரசா நூருல் இஸ்லாம் 22ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஐம்பெரும் விழா அழைப்பிதழ்- நமது கல்லாறு.காம் இணையதளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.!


வி.களத்தூர் மில்லத் நகர் மதரசா நூருல் இஸ்லாம் வழங்கும் ஐம்பெரும் விழா இன்ஷா அல்லாஹ் இன்று சனிக்கிழமை (28.05.2016) மாலை 3.00 மணியளவில் மில்லத் நகர் ஈத்கா வளாகத்தில் நடைபெறுகிறது.
ஐம்பெரும் விழாவான,
1.மதரசா நூருல் இஸ்லாமின் 22 ம் ஆண்டு நிறைவு விழா
2.புதிய மௌலவிகலுக்கு பாராட்டு விழா.
3.புதிய ஹாஜிகளுக்கு பாராட்டு விழா
4.கஷ்புன்நுசூர் முன்னால் மாணவர்கள் மன்றம் துவக்க விழா
5.மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
ஆகிய நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது…
மேலும் முற்காலத்து ரமலானின் அமல்களும் இக்காலத்து ரமலானின் அமல்களும் என்ற தலைப்பில் சிறப்பு சொற்ப் பொழிவு நடைபெற இருக்கிறது .

இச் சிறப்பு சொற்ப் பொழிவை சென்னை பாலவாக்கம் மஸ்ஜிதே மஹ்மூத் பள்ளியின் தலைமை இமாம் ,மௌலான,மௌலவி,ஹபீழ்,அல்ஹாஜ் A.U.அபூபக்கர் அவர்கள் நிகழ்த்துகிறார்.அதன் பிறகு குடும்பத்தில் அதிக மகிழ்ச்சியை தருவது பணமா? பாசமா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற இருக்கிறது..இப்பட்டிமன்றத்திற்கு நடுவராக மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரி பேராசிரியர் ,மௌலான,மௌலவி,அப்ஜலுல் உலமா. M.N.M.முஹம்மது இல்யாஸ் ஹஜ்ரத் அவர்கள் கலந்து கொள்கிறார்..
பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
குறிப்பு : இவ்வனைத்து நிகழ்வுகளும் இன்ஷா அல்லாஹ் நமது இணையதளத்தில் நேரலையில் ஒளிப்பரப்பு செய்ய நாடி உள்ளது.




VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.