Breaking News
recent

ரேஷனில் பொருட்கள் வாங்க ஆதார் கார்டு கட்டாயமாகிறது : ஜூன் 1ம் தேதி முதல் அமல்.!


தமிழகத்தில் ரேஷன் கடையில் ஆதார் அட்டை இருந்தால்தான் பொருட்கள் வழங்கப்படும். இதற்கான உத்தரவு ஜூன் 1ம் தேதி முதல் அமலாகிறது. 

 தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய், சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. 

இந்நிலையில், அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சிவில் சப்ளை துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், ‘ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர் தவறாது ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும்’ என கூறப்பட்டு உள்ளது. 

இந்த நடைமுறை ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஏராளமானோர் ஆதார் அட்டை இல்லாமல் உள்ளனர். 
இவர்களுக்கான மாற்று வழி எதுவும் கூறப்படவில்லை. 

அரசின் புதிய உத்தரவால் ஆதார் அட்டை இல்லாத ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதுபற்றி பயனாளிகள் கூறுகையில், ‘‘ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க, ஆதார் அட்டை கொண்டு செல்வது அனைவருக்கும் சாத்தியப்படுமா என தெரியவில்லை. 

ஆதார் அட்டை இல்லாதவர்களின் 
நிலைமை குறித்து சிவில் சப்ளை துறை தெளிவாக விளக்க வேண்டும்’ என்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.