Breaking News
recent

இந்த ஆண்டு உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டும்; விரைவில் இந்தியா உலகிலேயே முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு.!


அண்மைக்காலமாக, விமான போக்குவரத்து துறையில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, சீனாவையும் விஞ்சி வருகிறது இந்தியா. குறிப்பாக, விமான பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் வேகமாக உயர்ந்து வருகிறது. 

இந்திய ஏர்லைன்ஸ் விமானங்களில் சென்ற ஆண்டு மட்டும் 8 கோடி பேர் பயணித்துள்ளனர். 2014-ம் ஆண்டில் இதுவே 6.7 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டில் முதல் 4 மாதங்களில் மட்டும் 3 கோடி பேர் உள்நாட்டு விமானங்களில் பயணித்துள்ளனர். 

இது சென்ற ஆண்டைவிட 23 சதவீதம் அதிகமாகும். இப்படியே அதிகரிக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டிவிடும். 

அப்படி, 10 கோடியை தாண்டும் பட்சத்தில் உலகிலேயே அதிகளவில் உள்நாட்டு விமான பயணிகளை கொண்டிருப்பதில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.