இந்திய ஏர்லைன்ஸ் விமானங்களில் சென்ற ஆண்டு மட்டும் 8 கோடி பேர் பயணித்துள்ளனர். 2014-ம் ஆண்டில் இதுவே 6.7 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டில் முதல் 4 மாதங்களில் மட்டும் 3 கோடி பேர் உள்நாட்டு விமானங்களில் பயணித்துள்ளனர்.
இது சென்ற ஆண்டைவிட 23 சதவீதம் அதிகமாகும். இப்படியே அதிகரிக்கும் பட்சத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டிவிடும்.
அப்படி, 10 கோடியை தாண்டும் பட்சத்தில் உலகிலேயே அதிகளவில் உள்நாட்டு விமான பயணிகளை கொண்டிருப்பதில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக