Breaking News
recent

அடிக்கிற வெயிலுக்கு தரையில் ஆம்லேட் போடும் இந்தியா பெண்கள்.!(video)


தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியில் கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் அந்த பகுதி பெண்கள் தரையில் ஆம்லட் போடுகின்றனர். 

ஆண்களோ தோசைக்கல்லை மொட்டை மாடியில் வைத்து எளிதாக ஆம்லேட் சமைத்து சாப்பிடுகின்றனர். இந்த ஆண்டு வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கிறது. 

இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் வீசும் அனல் காற்றுக்கு 50க்கும் மேற்பட்டோர் சுருண்டு விழுந்து பலியாகியுள்ளனர். 

இந்நிலையில், தற்போது அடித்து வரும் வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் வகையில், தெலங்கானாவில் பெண் ஒருவர், வெயிலில் ஆம்லெட்டே போடுகிறார். இதேபோல ஆண்கள் பலரும் மொட்டை மாடியில் வெறும் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி ஆம்லேட் சமைத்து சாப்பிடுகின்றனர். 

இப்படியே வெயிலடித்தால் சுடிநீர் காய்ச்சுவது தொடங்கி சமையல் கூட செய்து விடலாம் என்று தெலுங்கானா பகுதி மக்கள் கூறியுள்ளனர். கேஸ் செலவு மிச்சம்தான்.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.