300 பேர் கலந்துக் கொண்ட போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்றார் 'சதீஷ் கோட்கே'
பாஜக- சிவசேனை ஆளும் 'மஹாராஷ்டிரா'வின் சோலாப்பூரில் அதிசயம்..!
'சதீஷ் கோட்கே' என்ற இந்த சிறுவனின் வீட்டுக்கு அருகில் ஒரு கோவிலும் அதையடுத்து ஒரு பள்ளிவாசலும் உள்ளது.
ஆச்சாரமான ஹிந்து குடும்பத்தில் பிறந்த சதீஷ் வீட்டில் தினசரி பூஜை புனஸ்காரத்துக்கும் குறைவில்லை.
என்றாலும் பாங்கு சத்தத்தால் ஈர்க்கப்பட்ட இந்த சிறுவன் பள்ளிவாசலுக்கு வந்து தினசரி பாங்கு சொல்லும் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளான்.
சதீஷைப் போலவே வேறு சில ஹிந்து சிறுவர்களும் பாங்கு சொல்லுவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.
இதற்கிடையில், ஜம்யியதுள் உலமா அமைப்பின் சார்பில் 300 முஸ்லிம் சிறுவர்கள் கலந்துக் கொண்ட பாங்கு சொல்லும் போட்டியில் சதீஷும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டார்.
ஆரம்பத்தில் சற்று பின்தங்கியிருந்த நிலையில், இறுதி சுற்றுவரை முன்னேறிய சதீஷ் முதல் பரிசை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/maruppu.in/videos/998287206925136/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக