Breaking News
recent

பெரம்பலூரில் இன்று கருணாநிதி பிரசாரம் செய்தார்.!(photos)




பெரம்பலூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கருணாநிதி இன்று பிரசாரம் செய்தார். திமுக கூட்டணி கட்சியினர் திரண்டுவரும்படி மாவட்டச் செயலாளர் குன்னம்.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :பெரம்பலூரில் கடந்த 19ம்தேதி திமுக பொருளாளர் ஸ்டாலின் நகரதெருக்களில் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று, பொதுமக்கள், வர்த்தகப் பிரமுகர்கள், தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள், பாத சாரிகளை நேரில் சந்தித்து, திமுக கூட் டணி சார்பாக பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சமூக சமத்துவப் படை கட்சித்தலைவர் சிவகாமிக்கு ஆதரவாக தீவிரப்பிரசாரம் மேற்கொண்டார். 

அதனைத்தொடர்ந்து குன்னத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரம்பலூர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் சிவகாமி, குன்னம்தொகுதி திமுகவேட்பாளர் தங்க துரைராஜ், அரியலூர்தொகுதி திமுக வேட்பாளர் சிவசங்கர் எம்எல்ஏ, ஜெயங்கொண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். 

இந்நிலையில் திமுக வேட்பாளர்களான தங்கதுரைராஜ், சிவசங்கர், கூட்டணி வேட்பாளர்களான சமூக சமத்துவப்படையின் சிவகாமி, காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து, திமுக தலைவர் கருணாநிதி இன்று(28ம்தேதி) காலை 10மணிக்கு பெரம்பலூரில் கடைவீதி, பழைய பஸ்டாண்டு, காமராஜர் வளைவு ஆகிய இடங்களில் பொதுமக்களிடம், வர்த்தகர்களிடம், சிறுவியாபாரிகளிடம் வாக்குகள் சேகரித்துப் பிரசாரம் மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள்,இன்னாள் எம்எல்ஏக்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியச் செயலாளர்கள், அனைத்துஅணி அமைப்பாளர்கள், துணைஅமைப்பாளர்கள், ஊராட்சிசெயலாளர்கள், கிளை நிர்வாகிகள், மகளிரணியினர் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.







VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.