Breaking News
recent

தமிழகத்தில் உவைஸியின் முதல் எழுச்சியுரை - வாணியம்பாடியில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம்.!(PHOTOS)


அகில இந்திய அளவில் அரசியலை தூர்வாரிக்கொண்டிருக்கும் மஜ்லீஸ் கட்சியின் சார்பில் தமிழக 2016 சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் முதல் பொதுக்கூட்டம் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு மஜ்லீஸ் கட்சியின் தேசிய தலைவர் அசத்துத்தீன் உவைஸி தலைமை தாங்கினார்.
நீண்ட காலமாக அசத்துத்தீன் உவைஸி தமிழகத்திற்கு வரவேண்டும் என்பதை மஜ்லீஸ் கட்சி தொண்டர்களை தாண்டி சமுதாய மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும், பேரெழுச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் அவரது வருகை குறித்து திடீர் அறிவிப்பு வெளியானவுடன் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், அண்டை மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாணியம்பாடியில் குவிந்தனர்.
அசத்துத்தீன் உவைஸியின் மொழி புரிகிறதோ இல்லையோ அவருடைய உரையை கேட்க, அவரது முகத்தை பார்க்க வாணியம்பாடியில் வரலாறு காணாத அளவில் மக்கள் திரண்டு பேரெழுச்சியை ஏற்படுத்தி விட்டனர்.
அசத்துத்தீன் உவைஸி வருகையால் வாணியம்பாடி விழாக்கோலம் பூண்டிருந்தது.





VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.