இந்திய சந்தைகளில் ஸ்மார்ட் போன்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், 251- ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்தது.
இதனால், ஒரே நாளில் அந்த ஸ்மார்ட் போனை வாங்குவதற்கு கோடிக்கணக்கான நுகர்வோர்கள் ஆன்லைனில் முண்டியடித்ததால், அந்நிறுவனத்தின் இணையதளம் ஸ்தம்பித்து போனது.
இந்த சூழலில் வாடிக்கையாளர்களிடம் முன்கூட்டியே பணத்தைப் பெற்று அந்நிறுவனம் மோசடியில் ஈடுபட முயல்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால், வாடிக்கையாளர்களிடம் பெற்ற முன்பணத்தை திரும்ப அளிக்கவும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் சமீபத்தில் முன்வந்தது.
இந்நிலையில், இந்த ஃபோன்களை முன்பதிவு செய்த 25 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதத்தில் ஃபோன்கள் விநியோகிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஜெய்பூரை தலைமையகமாக கொண்டு இயங்கும் Docoss Multimedia என்ற நிறுவனம் 888 ரூபாய்க்கு ஸ்மார்ட் ஃபோனை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக