Breaking News
recent

FACEBOOK மெசெஞ்சரில் நண்பர்களுடன் பேச புதிய வசதி அறிமுகம்.!


இனி பேஸ்புக்கின் மெசெஞ்சர் அப்ளிகேசனில் உள்ள நண்பர்களுடன் குரூப் கால் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.

மெசெஞ்சர் அப்ளிகேசனை உபயோகிப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, புதிய அம்சங்களை மேம்படுத்தி வருகிறது பேஸ்புக். தற்சமயம் குரூப் கால் வசதியை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் மொபைல்களில் கிடைக்கப்பறும் என்று தெரிவித்துள்ளது பேஸ்புக்.

இதைப்பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ள, பேஸ்புக் நிறுவனத்தின் துணைத்தலைவர் டேவிட் மார்கஸ், மெசெஞ்சரின் புதிய பதிவை உபயோகித்து நண்பர்களுடன் அளவில்லாமல் பேசி மகிழலாம் எனவும் வருங்காலத்தில் குரூப் வீடியோ சாட் வசதி அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

90 கோடி பேர் மெசெஞ்சர் அப்ளிகேசனை உபயோகிக்கின்றனர் என்றும், இந்த குரூப் சாட் வசதியினால் நண்பர்கள் வட்டத்தினருடன் நெருக்கமாக இருக்கலாம் எனவும் பெருமிதத்துடன் டேவிட் தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.