Breaking News
recent

சவுதியில் கடந்த சில தினங்களாக ஐஸ் மழை.!


பாலைவனப் பிரதேசமான சவுதி அரேபியால் கடந்த சில தினங்களாக ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. பாலைவனம் சோலைவனமாக மாறியதால் இந்த மாற்றங்கள். இனிமேலாவது நம் நாட்டில் மரங்களை வளர்ப்போம். விளை நிலங்களை மனைகளாக்காது இருப்போம்.

சவுதி அரேபியாவின் மக்கள் தொகைக்கு இந்த மழையானது மிக அதிகம். ஆனால் நம் நாட்டு மக்கள் தொகைக்கு பாதி அளவு கூட பெய்வதில்லை. பெய்கின்ற அந்த மழை நீரையும் சேமித்து வைக்காது வீணாக கடலில் கலக்க வைக்கிறோம். 

சவுதி அரேபியாவில் கழிவறை நீரை வடி கட்டி உரமாகவும், அதிலிருந்து கிடைக்கும் நீரை விவசாய நிலங்களுக்கும் பாய்ச்சுகிறார்கள். கழிவறை தண்ணீரையும் வீணாக்குவதில்லை. அதில் கிடைக்கும் மனித மலங்களையும் உரமாக்கி விடுகிறார்கள். செல்வந்த நாட்டுக்கு இருக்கக் கூடிய இந்த சிக்கன நடவடிக்கை வறிய நாடான நம் நாட்டுக்கு இருப்பதில்லை.

இது போன்று நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தக் கூடிய ஆட்சியாளர்களை நம் நாடு பெறுவது எப்போது? இறைவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மரங்களை நடுவோம்: நீராதாரத்தை கணக்கின்றி பெறுவோம்.








VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.