Breaking News
recent

துபாயில் நடந்த பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு.!


துபாயில் நடந்த பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

துபாயைச் சேர்ந்த தமிழக இளைஞர்கள் ஒருங்கிணைந்து குட்வில் பேட்மிண்டன் கிளப்பை ஏற்படுத்தி அதன் மூலம் அமீரக அளவில் பேட்மிண்டன் போட்டிகளை நடத்தி வருகின்றனர். இரண்டாவது ஆண்டாக அமீரக அளவில் பேட்மிண்டன் போட்டியினை நடத்தினர்.

எலைட் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தியா அதி மற்றும் எண்டிக்கு துபாய் விளையாட்டு கவுன்சில் அதிகாரி காசி அல் மதனி பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இதேபோல் இரட்டையர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

முன்னதாக பரிசளிப்பு விழாவுக்கு வந்த துபாய் விளையாட்டு கவுன்சில் அதிகாரி காசி அல் மதனியை ஒருங்கிணைப்பாளர் சையத் அலி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சையத் அலி, இளங்கோ, நசீர் அகமத் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.



 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.