Breaking News
recent

துபாயில் குழந்தைகள் பாதுகாப்பு மையம்.!


துபாயில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் துபாய் அரசின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

துபாயில் சமூக மேம்பாட்டு பணிகளுக்காக சமூக மேம்பாட்டு ஆணையம் கடந்த ஜுலை 2008-ஆம் ஆண்டு துபாய் ஆட்சியாளரும் அமீரக பிரதமரும், துணை அதிபருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களது உத்தரவின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த மையம் துபாயில் செயல்பட்டு வரும் பல்வேறு சமூக அமைப்புகளை கண்காணித்து வருகிறது. மேலும் அனுமதி பெறாமல் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கு எச்சரிக்கையும் வழங்கி வருகிறது.

இதன் கீழ் குழந்தைகளை பாதுகாக்கும் விதத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. சமூகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது தெரிந்தால் 800 988 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 

இந்த மையத்தில் உள்ள குழுவினர் சம்பந்த இடத்துக்கு நேரடியாக சென்று குழந்தைகளை பாதுகாப்புடன் மீட்டு இந்த மையத்தில் பராமரிக்கப்படுவர்.

குழந்தைகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் இந்த மையம் செயல்படும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.