Breaking News
recent

இடைக்கால மதாப் பாலத்தின் ஒரு பகுதி நீக்கப்பட்ட பின் கஃபாவின் கண்கொள்ளாகாட்சி.!


புனித கஃபாவை வலம் வருவதற்கு அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை அகற்றும் பணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டத்து இந்த செயல்முறை வரும் மே 27இல் பூர்த்தி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 மக்கா பெரிய பள்ளிவாசலின் விரிவுபடுத்தும் பணியின்போது அங்கு ஒன்றுகூடும் யாத்திரிகர்களின் நெரிசலை குறைக்கவே கடந்த 2013 ஆகஸ்ட் இந்த தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. 

இந்த பாலம் அமைக்கப்பட்டதன் நோக்கம் பூர்த்தியாகி இருப்பதாகவும் அது அகற்றப்படும் நேரம் வந்துவிட்டதாகவும் கஃபாவை வலம்வரும் பகுதியின் தொழில்நுட்பக் குழு குறிப்பிட்டுள்ளது. 

இடைக்கால மதாப் பாலத்தின் ஒரு பகுதி நீக்கப்பட்ட பின் கஃபாவின் கண்கொள்ளாகாட்சி.



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.