Breaking News
recent

துபாய் இந்திய துணை தூதரகத்தில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா.!


துபாய் இந்திய துணை தூதரகத்தில் டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கியவரும், சமூக சீர்திருத்தவாதியுமான டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் கொண்டாட்டப்பட்டது. துபாயில் இந்திய துணை தூதரகத்தில் அம்பேத்காரின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

இந்திய துணை தூதர் அனுராக் பூஷ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அம்பேத்கார் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் இசை மற்றும்  கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்திய துணை தூதரக அதிகாரிகள் முரளீதரன், சுமதி வாசுதேவ் உள்ளிட்ட ஏராளமானோர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.