ஷார்ஜாவில் மனநலக் குறைபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மனநலக்குறைபாடு குறித்த விழிப்புணர்வும், அதனை தவிர்க்கும் வழிமுறைகள் பற்றியும் விவரித்தனர்.
இதில் கிரீன் குளோப் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஹுமைத் ஹபீப் தலைமையில் பங்கேற்றனர். ஹாரித் என்ற மாணவர் மனநலக் குறைபாட்டை தவிர்க்கும் முறை குறித்த உரை நிகழ்த்தியது பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.
இந்த மாணவர்கள் அனைவரும் மனவளர்ச்சி குறைந்த மாணவர்களுடன் உரையாடும் சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக