சவூதி அரேபியாவில் கொலைக் குற்றச்சாட்டுக்குள்ளான இருவருக்கு
மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி இருவரும் இரு குடும்பங்களுக்கிடையிலான வாக்குவாதமொன்றின் போது இருவரைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அவர்களுக்கு தென் பிராந்தியமான நஜ்ரனில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் சவூதி அரேபியாவில் இந்த வருடம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் தொகை 81 ஆக உயர்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக