மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை 130 தலைப்புகளில், 80 பக்கங்கள் கொண்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:
- ஒரு கட்சி ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, கூட்டணி அரசு அமைக்கப்படும்.
- அதிமுக திமுக உண்மையான மக்கள் நல அரசாக இல்லாமல் கார்ப்பரேட் ஆதரவு அரசாகவே இயங்கின. உண்மையான மக்கள் நல அரசை தேமுதிக – மநகூ- தமாகா ஆட்சி வழங்கும்.
- விவசாய கடன்கள் உடனே ரத்து செய்யப்படும். விவசாயிகளுக்கு கடன் நிவாரணச் சட்டம் மற்றும் திட்டம் உருவாக்கப்படும்.
- வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்படும்.
- அனைத்து நிலைகளிலும் கல்வி இலவசமாக வழங்கப்படும்.
- வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை.
- லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்தப்படும்.
- உலக வர்த்தக ஒப்பந்தம், உள்நாட்டுத் தொழில்களை நாசப்படுத்துகிறது. மக்கள் விரோதக் கொள்கைகளை மக்கள் நலக் கூட்டணி எதிர்க்கும்.
- தனியார் துறையில் இட ஒதுக்கீட்டுக்காக சட்டத் திருத்தம்.
- உள்நாட்டு மீனவர்களுக்கு மீன்பிடி குத்தகை கட்டாயமாக்கப்படும்.
- கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கையருக்கு இட ஒதுக்கீடு.
- சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கபட்டுள்ள கடன்கள் ரத்து செய்யப்படும்.
- பட்டியலினத்தோர் துணைத்திட்ட நிதியில், சிறப்பு கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்.
- மின்னணுக் கழிவுகளை அகற்ற, மறுசுழற்சி செய்ய நடவடிக்கை.
- கல்லூரி, வேலை வாய்ப்பில் 25 மரம் நட்டு பராமரிப்பவர்களுக்கு ஒரு மதிப்பெண் என்ற அடிப்படையில் முன்னுரிமை மதிப்பெண்கள் வழங்கப்படும்.
- அரசுப் பேருந்து, ஆம்னி பேருந்துகள் கட்டணம் குறைக்கப்படும்.
- 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு பால் விநியோகம் இலவசம்.
- காவேரி டெல்ட்டா பகுதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.
- தமிழ் ஆய்வுக்க உலக நாட்டு பல்கலைக் கழகங்களில் தமிழ் ஆய்வு இருக்கைகள் ஏற்படுத்துவோம்.
- வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அமைச்சகம் அமைக்கப்படும்.
- பொதுக் கணக்குக் குழு அமைத்து அரசு திட்டங்களை மக்கள் கண்காணிக்க ஏற்பாடு.
- மக்கள் பிரச்சனைகளை துணிவோடு வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு அங்கீகாரம்.
- முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும். சசிபெருமாள் மது ஒழிப்பு இயக்கம் உருவாக்கப்படும்.
- மக்களை நாடி அரசு என்ற வகையில், அரசு நிர்வாகத்தில் மாற்றம்.
- அரசு விழாக்கள், கட்சி சார்பற்ற விழாக்களாக நடக்க விதி வகுப்போம்.
- நெறிமுறைக் குழு அமைத்து, பல்துறை அறிஞர்கள் கண்கானிப்புடன் கூடிய கூட்டணி அரசு அமைப்போம்.
- உண்மையான மக்கள் நல அரசை ஏற்படுத்துவோம், கார்ப்பரேட் சேவகர்களை வீட்டுக்கு அனுப்புவோம்.
- சிறு தொழில் பாதுகாப்புக்கு வழிவகுக்கப்படும்.
- மாணவர்களின் கடன் தள்ளுபடி.
- பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு ரத்து செய்யப்படும்.
- மாணவர்களுக்கான தனி பேருந்துகள்.
- இலவசமான சுத்திகரிக்கபட்ட குடிநீர் வழங்கப்படும்.
- மீனவர் நலன் பாதுகாக்கப்படும்.
- வணிகர்களுக்கு ஒற்றை சாளர முறைப்படி எளிமையான முறையில் உரிமம் வழங்கப்படும்.
- இஸ்லாமிய கைதிகள் விடுதலை முயற்சிக்கப்படும்.
- மத வன்முறைகள் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும்
- சில்லறை வணிகர் நலன் காக்கப்படும்.
- மதம் மாறிய இஸ்லாமியரை பிற்படுத்த பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்கப்படும்.
- மகளிர் சுய உதவி கடனை அரசே செலுத்தும்.
- திருநங்கைகளுக்கு தனி வாரியம், பாதுகாப்பான அடுக்குமாடிக் குடியிருப்புகள்
- அனைத்து அலுவலகங்களிலும் அம்பேத்கர் படம்
- ஆரம்ப சுகாதார நிலையங்களில் மனநல சிகிச்சை
- மின்னணு கழிவுகள் மேலாண்மை
- படித்த இளைஞர்களுக்கு டேட்டா பேஸ்.
- மரம் நடுதல் பேரியக்கம்.
- ஸ்டெர்லைட் நச்சு ஆலை அகற்றம்.
- குளிர்பானங்கள் தயாரிக்க நிலத்தடி நீர் உறிஞ்சுதல் தடுக்கப்படும்.
- சீமைக்கருவேல மரங்கள் ஒழிப்பு
- மாவட்டம் தோறும் பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனைகள்
- கல்விக்கடன்கள் உதவித்தொகைகளை அரசே செலுத்தும்
- தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டப்படும்.
- ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் நல் உறவு பராமரிக்கப்படும்.
- மக்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு பாராட்டுப் பத்திரம்.
- பத்திரிகைகள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
- பத்திரிகையாளர்களுக்கு வீடு, மருத்துவ, வட்டியில்லா கடனில் வாகன வசதி.
- இரு மாதங்களுக்கு ஒரு முறை செய்தியாளர்கள் சந்திப்பு.
- சட்டமன்ற நடவடிக்கைகள் இணையத்தில் பதியப்படும்.
- அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சாதி வேறுபாடுகள் இன்றி வழிபடும் உரிமை நிலை நாட்டப்படும்.
- பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்கப்படும்.
- மலக்குழிக்குள் மனிதர்கள் இறங்கி வேலை செய்யும் அவலம் ஒழிக்கப்படும்.
- மலைவாழ் மக்கள் குறைதீர் கூட்டங்கள்
- அனைத்துப் பழங்குடியினருக்கும் சாதிச் சான்றிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக