அஜ்மானில் கிரீன் குளோப் மாணவர்கள் அமைப்பின் சார்பில் பூமி நாளையொட்டி மரம் நடும் விழா மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கிரீன் குளோப் மாணவர் அமைப்பின் தலைவர் ஹுமைத் அபுபபக்கர் தலைமை வகித்தார். அவர் பூமி நாள் குறித்தும், மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
குறிப்பாக வீட்டில் தோட்டங்களை அமைத்து வீட்டுக்கு தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்ளும் வாய்ப்புள்ளது. இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சி நடைபெற்ற ஓட்டல் ஒன்றின் தோட்டத்தில் நடைபெற்றது. அந்த ஓட்டல் நிர்வாகிகள் மாணவர்களின் இந்த பணிகளை பாராட்டினர்.
மிகவும் இளம் வயதில் இத்தகைய பணிகளில் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது என தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக