ஐரோப்பாவில் இஸ்லாம் இன்று மிகவும் வேகமாகப் பரவி வருவதை ஆய்வுகள் மூலமும், கருத்துக்கணிப்புக்களின் ஊடாகவும் நாம் அறிந்துகொள்கிறோம். 16 ஆம் நூற்றாண்டில் முதலாவது எலிசபத் மகாராணியாரின் ஆட்சிக்காலத்தில் தேசத்தின் அடையாளத்தை அறிந்துகொள்வதற்கான வாய்ப்புக்கிடைத்தது.
இந்தக் காலப்பகுதியிலேயே பிரித்தானியாவில் வாழ்ந்த முஸ்லிம்கள் வெளிப்படையான முறையில் வாழவும், மார்க்க அனுஷ்டானங்களை பின்பற்றவும் ஆரம்பித்தார்கள் என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் Queen Mary College கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் ஜெரி ப்ரோட்டன் Jerry Brotton தெரிவித்துள்ளார்.
வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு,மத்திய ஆசியா போன்ற பிரதேசங்கள் பிரித்தானியாவில் இருந்து நீண்ட தூரத்தில் அமைந்திருந்தாலும் 16ம் நூற்றாண்டில் லண்டன் நகரில் செறிவான முறையில் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள்.
கி.பி 1500ம் ஆண்டுகாலத்தில் லண்டன் நகரில் வாழ்ந்த முஸ்லிம்கள் வெளிநாட்டுத்தூதுவர்களாகவும், வர்த்தகர்களாகவும்,மொழிபெயர்ப்பாளர்களாகவும்,இசைக் கலைஞர்களாகவும் பணியாற்றினார்கள் என்று பேராசியர் Jerry Brotton அவர்கள் தனது என்று புத்தகத்தில் A History of the World in 12 Maps கூறுகிறார்கள்.
கத்தோலிக்க ஐரோப்பாவில் இருந்து 16ம் நூற்றாண்டு காலத்தில் எலிசபத் மகாராணியார் தனிமைப்படுத்தப்பட்டமையால் இங்கிலாந்தில் முஸ்லிம்கள் குடியேறுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது.
கத்தோலிக்க திருச்சபையின் 225வது பாப்பரசராக இருந்த பாப்பரசர் ஐந்தாம் பயஸ் அவர்கள் Pope Pius V பிரித்தானிய மகாராணியார் முதலாம் எலிசபத்தை கி.பி 1570ம் ஆண்டளவில் திருச்சபையில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து முஸ்லிம்களுடன் பிரித்தானிய கிறிஸ்தவர்கள் தொடர்பு வைக்கக்கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடைநீங்கியது.
இதனால் பிரித்தானியாவுக்கும் முஸ்லிம் அரசுகளுக்கும் இடையிலான தொடர்ப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. மொரோக்கோவின் சாதி ஆட்சியாளர்கள், துருக்கியின் உஸ்மானிய ஆட்சியாளர்கள், இதேபோன்று ஈரானின் பேரரசுடனும் தொடர்புகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு பிரித்தானியாவுக்கு கிடைத்தது.
முதலாவது எலிஸபத் மகாராணியார் பிரித்தானியாவுக்கும்,முஸ்லிம் உலகத்திற்கும் இடையிலான வர்த்தக,பாதுகாப்பு, உறவுகளை மேம்படுத்துவது பற்றிக் கூடுதல் கவனம்செலுத்தினார். சமகாலத்தில் இந்தியர், நீக்ரோக்கள்,துருக்கியர்கள் போன்ற இனங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் இலண்டன் நகருக்குச் செல்வதை வழக்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.
முதலாவது எலிசபத் மகாராணியாரின் ஆட்சிக்கு அதாவது கி.பி 1500ம் ஆண்டுகாலப்பகுதிக்கு முன்னர் பிரித்தானியாவில் மாத்திரமல்ல முழு கிறிஸ்தவ மண்டலமுமே இஸ்லாத்தை இரத்தம் தோய்ந்த அல்லது எதிர்த்தரப்பாகக் கருதி வந்தது.
சிலுவை வீரர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாத்தை பிரித்தானிய மக்கள் நோக்கியமை இதற்கான காரணமாகும்.
இங்கிலாந்திலோ பிரித்தானியாவிலோ வாழ்ந்த மக்கள் 17ம் நூற்றாண்டு வரை இஸ்லாம் அல்லது முஸ்லிம் என்ற சொல்லை அறிந்திருக்கவில்லை என்று பிரித்தானியாவின் பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை மேற்கொண்ட ஆய்வில் இருந்துதெரிய வந்துள்ளது.
முஸ்லிம்களைக் குறிக்க அக்காலத்தில் முழு ஐரோப்பாவிலும் Saracens (ஸரசன்) என்ற சொல்பயன்படுத்தப்பட்டு வந்தது. ஸரசன் என்ற சொல்லை மத்தியகாலத்தில வாழ்ந்த ஐரோப்பியர்கள் முஸ்லிம்களைக் குறிக்கப் பயன்படுத்தினார்கள்.
நபி இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலம் வரையான வரலாற்றைக்கொண்ட பாரம்பரியக் கோத்திரம் என்பது என்ற சொல்லுக்குரிய அர்த்தமாகும். பிரித்தானியாவில் வாழ்ந்த மக்களுக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது என்ற விஷயம் இலகுவானதாக இருக்கவில்லை.
முஸ்லிம்கள் தொடர்பில் ஊட்டப்பட்ட கருத்துக்கள் இதற்கான காரணமாக இருக்கலாம் என்பது நவீன வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். ஆனால் முதலாவது எலிசபத் மகாராணியாரின் ஆட்சிக்காலத்தில் இந்த நிலை மாற்றம் கண்டது.
கி.பி 1562ம் ஆண்டில் முதலாம் எலிசபத் அவர்களின் வர்த்தகத் தூதுக்குழு பாரசீகத்தை ஆட்சிசெய்த முதலாவது ஷா தஹ்மஸாப் மன்னரின் அரசசபையை சென்றடைந்தது. இந்த குழுவில் பக்கிங்ஹாம் மாளிகையின் அறிஞர்கள் குழுவும் இடம்பெற்றிருந்தார்கள்.
ஷீ ஆ சுன்னா வேறுபாடுகள் உட்பட பலவிடயங்களை அவர்கள் மகாராணியாரிடம் சமர்ப்பித்தார்கள். இவர்களுடன் அவ்ரா சுல்தான் என்ற இளம் முஸ்லிம்பெண்ணும் அனுப்பப்பட்டிருந்தார்.
அவ்ரா சுல்தான் என்ற முஸ்லிம் பெண் முதலாவது எலிசபத் மகாராணியாரின் அன்புக்குரியவராக மாறினார். குரனடாவின் பட்டுத்துணிகளையும் ஸ்பெய்ன் நாட்டின் காலணிகளையும் அறிமுகம் செய்தார் என்று பிபிசி உலக சேவையின் கலாசாரப்பிரிவு மேற்கொண்ட ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.
முதலாம் எலிசபத் மகாராணியாரின் காலத்தில் கடற்படைத்தளபதியான வைஸ் அட்மிரல் 1586ம் ஆண்டு காலத்தில் மத்தியதரைக்கடல் அமைந்துள்ள பிரதேசத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் போது வெற்றிபெற்று கைதிகளாக அழைத்துவந்தவர்களில் ஒருமுஸ்லிமும் இடம்பெற்றிருந்தார்.
1597ம் ஆண்டுகாலத்தில் லண்டன் நகரில் வாழ்ந்த மொரோக்கோ நாட்டவர் ஒருவர் உயிரிழந்த போது திருச்சபையின் தலையீடு இன்றி அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் கிடைக்காமை இதற்கான காரணமாகும். ஆனால் அவர் ஒரு முஸ்லிம் என்ற விடயம் பிற்காலத்திலேயே தெரியவந்துள்ளது.
1575ம் ஆண்டு காலத்தில் புகழ்பெற்ற வர்த்தகரான சம்சன் ரூவ்லி அவர்கள் தலைமையிலான குழுவினர் வடஆபிரிக்காவிற்கு விஜயம் செய்து இஸ்லாத்தை அறிந்துகொள்ள விரும்பினார்கள். இதில் பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
உஸ்மானிய கிலாபத்தின் அல்ஜீரியப் பிராந்தியத்திற்கு பொறுப்பான ஆளுனராக இருந்த ஹைருத்தீன் பர்பரோசுடைய திறைசேரியின் செயலாளராக ஹசன் அகா என்பவர் நியமிக்கப்பட்டார்.
ரோஸ் என்ற பெயருடைய இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதன் பின்னர் தனது பெயரை ஹசன் அகா என்று மாற்றிக்கொண்டார். ஹைருத்தீன் பர்பரோஸுடைய நம்பிக்கைக்குரிய ஆலோசகராகவும் அவர் திகழ்ந்தார்.
பாரசீகம், துருக்கி, மொரோக்கோ ஆகிய இடங்களில் இருந்து அதிகம் முஸ்லிம்கள் பிரித்தானிய மகாராணியாரால் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
மொரோக்கோவில் மெவ்லாய் இத்ரீஸ் மன்னர்களின் ஆட்சிநடந்த காலத்தில் பிரித்தானியாவிற்கான முதலாவது தூதுவராக அஹமத் பில்காஸிம் அவர்கள் 1589ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்கள்.
பிரித்தானியாவைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை ஸ்பெய்ன் மன்னர் ஆரம்பித்த போது முஸ்லிம்களே பிரித்தானியாவைப் பாதுகாத்தார்கள். மொரோக்கோவின் மன்னர் மௌலாய் அஹமத் அல் மன்சூர் அவர்களே பாதுகாத்தார்கள்.
பத்துவருடங்களின் பின்னர் முஹம்மத அல் அன்னூரி அவர்கள் லண்டன் நகருக்கான பிரித்தானியத் தூதுவராக நியமிக்கப்பட்டார். மத்திய லண்டன் நகரில் மொரோக்கோவின் தூதரகம் அமைக்கப்பட்டிருந்தது.
எலிஸபத் மகாராணியாரை தூதுவர் முஹம்மத் அல் நூரி இரண்டு தடவைகள் சந்தித்தார்கள் இதன் போது ஸ்பெய்னிடம் இருந்து தமது நாட்டையும் காலனிகளையும் பாதுகாக்க முஸ்லிம்கள் உதவவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை முன்வைத்தார்கள்.
முதலாம் எலிசபத் மகாராணியார் முஸ்லிம்களே பிரித்தானியாவின் பாதுகாப்பை உறுதிசெய்ய உகந்தவர்கள் என்று நம்பினார் கி.பி 1000ம் ஆண்டு முதல் 1291ம் ஆண்டு வரையிலான காலத்தில் வாழ்ந்த பிரித்தானியாவின் சிலுவை வீரர்கள் இஸ்லாமிய அரபுச் சொற்களை அறிமுகம் செய்துள்ளார்கள்.
அரபு சொற்களும் ஆங்கிலத்துடன் இந்தகாலத்திலேயே கலந்ததாக பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். 1636ம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அரபுக் கற்கைக்கான இருக்கை அமைக்கப்பட்டதோடு வில்லியம் லோர்ட் அவர்கள் அதன் தலைவராக இருந்தார்கள்.
பிரித்தானியாவின் சட்டத்துறை நிபுணரும், கீழைத்தேய ஆய்வாளருமான ஜோர்ஜ் சேல் அவர்களால் முதலில் அல்குர்ஆனை1734ம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
பிரித்தானியப் பாராளுமன்றத்தின் House of Lords என்று அழைக்கப்படும் பிரபுக்கள் சபையின் ஸ்டான்லி பிரபு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
1935ம் ஆண்டில் பிபிசி உலகசேவை முதலில் அல்குர்ஆன் ஓதலை ஒலிபரப்பியது. 1997ம் ஆண்டு பிரித்தானிய பாராளுமன்றத்தின் பொதுச்சபையில் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற முஹம்மத் சர்வார் அல்குர்ஆனை முன்வைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திமோதி ஜே வின்டர் அவர்கள் தற்கால இஸ்லாமிய கற்கைக்கு வழங்கிவரும் பணிகள் மகத்தானவை.
உலக மக்கள் அனைவரும் நினைத்ததை விட முஸ்லிம்கள் பிரித்தானியாவிற்கு வழங்கிய பங்களிப்புக்கள் மகத்தானவை என்று பிபிசி உலக சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக