Breaking News
recent

குவைத்தில் சம்பளக் குறைப்புக்கு எதிராக எண்ணெய் பணியாளர்கள் போராட்டம்.!

குவைத்தில் எண்ணெய் நிறுவன பணியாளர்களின் சம்பளத்தை குறைக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் ஆயிரக் கணக்கான பணியாளர்கள், அந்த நிறுவனத்தின் தலைமையகத்துக்கு வெளியே போராட்டம் நடத்துகின்றனர்.
வேலைநிறுத்தப் போராட்டத்தால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக நிறுவனத்தின் அதிகாரிகள் அவசரத் திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளனர்.
உலக எண்ணெய் விலை வீழ்ச்சியால் குவைத் பாதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக அரசு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இந்த சம்பளக் குறைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.