Breaking News
recent

துபாயில் இந்திய துணை தூதரகத்தில் இந்திய மொழி பயிற்சிக்கான‌ நிறைவு நிகழ்ச்சி.!


துபாய் இந்திய துணை தூதரகத்தில் சமஸ்கிருத மொழி பேச்சு குறித்து இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. முதல் கட்டமாக 30 பேர் இந்த பயிற்சியில் பங்கேற்றனர். 10 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பின் நிறைவில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்ப்பட்டது.

சமஸ்கிருத பாரதி அமைப்பின் பொது செயலாளர் சம்மு கிருஷ்ண சாஸ்திரி ,இந்திய துணை தூதரக அதிகாரி சுமதி வாசுதேவ் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். எவ்வித கட்டணமும் இன்றி இது போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தியதற்கு பயிற்சியில் பங்கேற்றோர் நன்றி தெரிவித்து கொண்டனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.