அஸர் தொழுகையின் பின், நமது நிகாஹ் பயான் முடிந்ததும் விவாகப் பதிவாளர் மணமகனிடம் உங்களது மனைவிக்கு மஹராக என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டதும், உடனே மணமகன் எனக்கு மனைவியாக வரப்போகும் அந்த பெண் கேட்ட மஹரையும் மேலதிகமாக குறித்த தொகை பணமும் கொடுக்கிறேன் என்றார்.
உடனே மணமகன் அல் குர்ஆனின் சூரா பத்ஹ் 48 வது அத்தியாயத்தை மனப்பாடம் செய்து நீங்கள் தருவதையே எனக்கு நீங்கள் மஹராகத் தந்து என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்ற மனைவியின் வேண்டுதலை மணமகன் அந்த சபையில் உரைத்தார் அல் ஹம்துலில்லாஹ்.
இவ்வாறான செய்திகளை சமூக வலைத்தளங்களில் நம்மால் அவ்வப்போது ஒரு கதையாகவோ சம்பவமாகவோ வாசிக்கக் கிடைத்தாலும், நான் நேரில் கண்ட முதல் அனுபவம் என்பதனால் இதனை நமது முஹிப்பீன்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
முஃமின்களின் அன்னைகளான ஆயிஷா, ஹப்ஸா, ஸைனப், (ரழி) உம்மு சுலைம் (ரழி) போன்ற கல்வியறிவுள்ள சிறந்த சாலிஹான ஈமானியப் பெண்களும் நம் சமூகத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
மாஷா அல்லாஹ்..!
அதிலும் ஆச்சரியம் என்னவென்றால் குறித்த அந்த மணப்பெண் பாகிஸ்தானில் கல்விகற்ற ஒரு டாக்டர் பெண் என்பதுவே.
அல்லாஹ் அவர்களது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கி வைப்பானாக..!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக