Breaking News
recent

தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் நவீன மயமாக்கப்படுகிறது.!


தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் செப்டம்பர் மாதத்திற்குள் நவீன மயமாக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. வாகனங்கள் செல்லும் போதே எடைபோடுவதற்காக சுங்கச்சாவடி அருகே எடைமேடை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சரக்கு வாகன ரசீதில் வாகனத்தின் எடையை குறிப்பிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

சுங்கச்சாவடி ஊழியர் மிரட்டப்படுவதை தெரிவிக்க இலவச தொலைபேசி எண் வழங்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கூடுதல் சுமைகளை ஏற்றிச் சென்ற வாகனங்கள் குறித்த பட்டியலை சமர்பிக்கவும், திருவள்ளூர் நவீன சுங்கச்சாவடியை வரும் 30-ம் தேதிக்குள் நடைமுறைக்கு கொண்டுவரவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.