அதேபோல் பள்ளிவாசல்களுக்கு துருக்கி மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் நிதியும் நிறுத்தப்பட வேண்டும் என கிறிஸ்டியன் சோஷியல் யூனியன் கட்சியின் பொதுச் செயலர் ஆண்ட்ரேயாஸ் ஷோயா(ர்) கூறியுள்ளார்.
அரசியல்மயமாக்கப்பட்ட இஸ்லாம் ஒருங்கிணைவதை குலைக்கிறது, தனக்கு பொருந்தக்கூடிய வகையிலான இஸ்லாத்தை ஐரோப்பா வடிவமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
ஜெர்மனியப் பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள் ஜெர்மனியில் பயிற்சி பெறவேண்டுமே அன்றி, வெளிநாடுகளில் அல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமது சகோதரக் கட்சியான கிறிஸ்டியன் ஜனநாயகக் கட்சியின் தலைவியான ஏங்கலா மெர்க்கல் அம்மையார் குடியேற்றங்களை அணுகும் முறையையும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக