இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் விமான நிலையத்திலிருந்து சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு Etihad Airways என்ற பயணிகள் விமானம் புறப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் வயதான தம்பதி இருவரும் இருந்துள்ளனர். இந்நிலையில், ஓடுத்தளத்தில் விமானம் சென்றுக்கொண்டு இருந்தபோது அந்த வயதான தம்பதிக்கு திடீரென குறுஞ்செய்தி(SMS) வந்துள்ளது.
அதில், அவர்களுடைய பேரன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனே மருத்துவமனைக்கு வருமாறு செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இந்த தகவலை கண்டு அதிர்ச்சியுற்ற அவர்கள் உடனடியாக விமானக் குழுவினருக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
விமானத்தை மேலே எழுப்ப இருந்த விமானிகளிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், கண நேரமும் சிந்திக்காமல் விமானத்தை மேலே எழுப்புவதை தவிர்த்துவிட்டு விமானத்தை புறப்பட்ட இடத்திற்கே திருப்பி கொண்டு வந்துள்ளனர். தம்பதி உடனடியாக விமானத்திலிருந்து இறக்கிவிட்டு விமான பயணத்தை தொடர்ந்துள்ளனர்.
உரிய நேரத்தில் செயல்பட்டு முதியவரின் தேவை உணர்ந்து விமானத்தை நிறுத்திய விமானிகளை பயணிகள் அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக