Breaking News
recent

'ஆதார்' இருந்தால் உடனடியாகமொபைல் இணைப்பு.!


விண்ணப்பித்த சில நிமிடங்களில், மொபைல் போன்இணைப்பு பயன்பாட்டுக்கு வரும் வகையில், புதிய விதிமுறைகளை வெளியிட, தொலைத் தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.தொலைத் தொடர்பு துறை செயலர் தீபக் கூறியதாவது:

தொலைத்தொடர்பு துறை, ஒவ்வொரு மாதமும், சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளதிட்டமிட்டுள்ளது. விரைவில், மொபைல் போன்களுக்கான, 'இ - கே.ஒய்.சி.,' எனப்படும், மின்னணுவியல் முறையில், வாடிக்கையாளர் பற்றிய தகவல்களை பெறும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. 


புதிய மொபைல் போன்இணைப்புக்கான விண்ணப்பம் அளிக்கும் வாடிக்கையாளரின் ஆதார் எண் மற்றும் தகவல்கள், சில நிமிடங்களில் சரிபார்க்கப்பட்டு, 'சிம் கார்டு' உடனடியாக 'ஆக்டிவேட்' செய்யப்படும். இந்த நடவடிக்கை மூலம், போலி மொபைல் போன் இணைப்புகள் ஒழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.