துபாய் இந்திய துணை தூதரகத்தில் கவ்வாலி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. துபாயில் இந்திய கலைகளை வெளிப்படுத்தும் வகையில் இந்திர தனுஷ் என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக கவ்வாலி நிகழ்ச்சியை இம்ரான் கான் தலைமையிலான குழுவினர் நடத்தினர்.
இந்திய துணைத் தூதரக அதிகாரி தீபா ஜெயின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் கவ்வாலி குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியினை கவ்வாலி ரசிகர்கள் பலர் சிறப்புடன் பங்கேற்று ரசித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக