Breaking News
recent

துபாயில் தொழிலாளர்களுக்கான ‘வாசிப்பு ஆண்டு’ குறித்த கருத்தரங்கம்.!


துபாயில் தொழிலாளர்களுக்கான ‘வாசிப்பு ஆண்டு’ குறித்த கருத்தரங்கம் ஈமான் சார்பில் துணை பொது செயலாளர் தாஹா,விழாக்குழு செயலாளர் ஹமீது யாசின், நலத்துறை செயலாளர் பைசுர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்பு.

மரியாதைக்குரிய துபாய் ஆட்சியாளர் மேதகு ஷேக் முஹம்மது பின் ராசித் அல் மக்தூம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் Community Development Authority, , Government Of Dubai சார்பில் நடத்தபட்டு தொழிலாளர் நலனுக்காக ‘வாசிப்பு ஆண்டு’ கருத்தரங்கத்தில் Community Development Authority, , Government Of Dubai நிர்வாகத்தால் அங்கீரகப்பட்டுள்ள‌ நமது ஈமான் கல்ச்சுரல் சென்டர் உள்ளிட்ட‌ சமூக நல அமைப்புகள் பங்கேற்றது. 

இக்கருத்தரங்கில் பங்கேற்ற ஈமான் உள்ளிட்ட சமூக நல அமைப்புகள் 4 குழுக்களாக அமைக்கப்பட்டு தொழிலாளர்களின் திறமைகளை மேம்படுத்த அவர்களுக்கு வாசிப்பு திறனை அதிகப்படுத்த‌ எவ்வாறான பணிகள் மேற்கொள்ளலாம் என பரிந்துரைக்க கேட்டு கொள்ளப்பட்டது. 

இதன்படி ஈமான் சார்பில் பங்கேற்ற குழுவின் சார்பாக இத்திட்டத்தை மேம்படுத்த தேவையான ஆலோசனைகள் குறித்து கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது. பைசுர் ரஹ்மான் இதனை செயல்படுத்துவது குறித்து எடுத்துரைத்தார். 

ஈமான் சார்பில் எடுத்துரைக்கப்பட்ட தொழிலாளர் நலன் மேம்படுத்துவது குறித்த ஆலோசனைகளுக்கு கருத்தரங்கில் பலத்த வரவேற்பு கிடைத்தது. Community Development Authority சார்பிலும் மிகுந்த மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.