Breaking News
recent

துணி துவைப்பதில் இருந்து விடுதலை - சூரிய ஒளியில் கறைகளை நீக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு.!


வீட்டு வேலைகளில் மிகவும் கடினமானது எதுவென்றால் அது துணி துவைப்பது தான். வாஷிங் மெஷின் வந்த பிறகு சிரமம் குறைந்துள்ளது என்றாலும் துணி துவைப்பதில் இருந்து முழுமையான விடுதலை கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டுப்பிடித்துள்ளனர்.

 நானோ டெக்னாலஜியை பயன்படுத்தி துணியில் புதிய நானோகட்டுமானங்களை உருவாக்குவதன் மூலம் துணிகளின் கறைகள் நீக்கப்படுகின்றன.

துணியில் நானோகட்டுமானங்களை உருவாக்க காப்பர் மற்றும் சில்வர் பயன்படுத்தப்படுகிறது. நானோகட்டுமானங்களுக்கு உட்படுத்தப்பட்ட துணிகளை சூரிய ஒளியில் அல்லது லைட் வெளிச்சத்தில் போடும் போது அவைகளின் கறைகள் நீங்கிவிடுவதாக கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த கண்டுபிடிப்பு பயன்பாட்டுக்கு வந்தால் ஏகப்பட்ட நேரம் மிச்சமாவதுடன், தண்ணீரையும் சேமிக்க முடியும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.