வரும் 24-ம் தேதி ஹோலி பண்டிகை, அதற்கு அடுத்த நாள் (25-ம் தேதி) புனித வெள்ளி, 26-ம் தேதி மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அரசு விடுமுறை, அடுத்த நாள் வார விடுமுறை.
எனவே தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. எனவே, வாடிக்கையாளர்கள் முக்கியமான பணப்பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக்கொள்வது நல்லது.
இந்த தொடர் விடுமுறையால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து ஏ.டி.எம்.-களிலும் போதுமான பணம் கையிருப்பு வைக்கப்படும் என்று சில வங்கிகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக