Breaking News
recent

மனிதர்களை தவிர அனைத்தையும் உணவாக உட்கொள்ளும் அதிசய மனிதர்.!


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பல்பு, டியூப் லைட் மற்றும் பூச்சிகள், பாம்புகள் உள்ளிட்ட ஜந்துகளை உணவாக உட்கொள்ளும் அதிசய மனிதரை அனைவரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். 

மனிதர்கள் பெரும்பாலும் தங்களுக்கு ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே உண்பது வாடிக்கை. இதில் விதிவிலக்காக சிலர் இருப்பது அவ்வப்போது செய்திகளில் வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சியை அடுத்த மூங்கில் துரைபட்டில் வசித்து வருபவர் யோகேஷ். 

யோகேஷ்-க்கு தற்போது 42 வயதாகிறது. இவர் தனது 18 வயதில் இருந்தே பல்பு, டியூப் லைட், பூச்சிகள், பாம்புகள், பல்லிகள் என விஷ பூச்சிகளை உணவாக உண்ண ஆரம்பித்துள்ளார். 

இந்த பழக்கம் நாளாக நாளாக அதிகரித்து, தற்போது பெட்ரோல், மண்ணென்ணெய், ஆயில் போன்றவற்றைவும் குடித்து ஜீரணம் செய்கிறார். இந்த பழக்கத்தை மாற்ற முடியவில்லை என்றும், மனிதர்களை தவிர அனைத்து உயிரினத்தையும் உண்ணுவேன் என்றும் யோகேஷ் பெருமிதம் தெரிவிக்கிறார். 

மேலும் கருங்கல் செங்கல் உள்ளிட்ட பொருட்களையும் தினசரி உணவாக உட்கொண்டு யோகேஷ் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.  
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.