Breaking News
recent

பாரத் மாதா கி ஜே' என்று முழக்கமிடாத மதர்ஸா மாணவர்களுக்கு அடி.!


டெல்லியின் பேகம்பூர் பகுதியில் உள்ள பூங்காவில் ’ஜெய் மாதா கி’ மற்றும் ’பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிட மறுத்த மதர்ஸா மாணவர்கள் மூவரை கும்பல் ஒன்று தாக்கிஉள்ளது.   

மர்மகும்பல் தாக்கியதில் ஒரு மாணவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது என்றும் மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

காயம் அடைந்த மாணவர்கள் தில்காஷ், அஜ்மல் மற்றும் நயீம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மாணவர்களை தாக்கிய மர்ம நபர்கள் அடையாளம் காணப்படவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மாணவன் தில்காஷ் போலீசாரிடம் பேசுகையில், நாங்கள் பூங்காவில் நடந்து சென்றுக் கொண்டு இருந்தோம் அப்போது 5 பேர் கொண்ட கும்பல் எங்களை தாக்கியது. எங்களிடம் தவறாக நடந்துக் கொண்ட அவர்கள் ’பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிட கூறியது.

நாங்கள் மறுப்பு தெரிவித்ததும், அவர்கள் எங்களை தாக்கினர் என்று கூறிஉள்ளான். நாங்கள் அவர்களிடம் இருந்து தப்பித்து மதர்ஸாவிற்கு சென்றுவிட்டோம் என்று கூறிஉள்ளனர். இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.