Breaking News
recent

அஜ்மான் தீ விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு அஜ்மான் அரசு உதவி.!


நேற்று அதிகாலை அஜ்மானில், அஜ்மான் ஒன் டவரில் மிக பெரிய தீ விபத்து ஏற்பட்டது. டவர் 8 – ல் எரிந்த தீ காற்றின் வேகத்தால் அடுத்துள்ள டவர் – 6 லும் பரவியது. 
உடனடியாக போலீசார், தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அந்த கட்டிடத்தின் பார்கிங் ஏரியாவில் பார்க் செய்த கார்களில் 5 கார்கள் முற்றிலும் தீக்கரையாகின.
இந்த விபத்தால் சுமார் 300 க்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் உடைமைகளை இழந்து வீதியில் நின்றனர். சில பேர் கார்களில் தங்கினர். உடனடியாக அஜ்மான் அரசு தலையிட்டு இவர்கள் அனைவருக்கும் உணவு, தங்க இட வசதி செய்து கொடுக்கப்பட்டது.
அஜ்மான் சுற்றுவட்டார சில ஹோட்டல்களில் இவர்களுக்கு சலுகை விலையில் ரூம்களும் வழங்கப்பட்டது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.