Breaking News
recent

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் விஷம் குடித்த பெண் சாவு.!


இன்று காலை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர் வந்த மயங்கி விழுந்தார்.
அதனால் அங்கிருந்த பயணிகள் அவரை மீட்டு முதலுதவி செய்ய முயற்சித்தனர். அப்போது அவர் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை அருந்தி இருப்பது தெரிய வந்தது.
உடனே அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சையின் போது அப்பெண் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் எலிசபத் (வயது 33), இவரது கணவர் தங்கசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் என்றும்,
எலிசபத் அன்னமங்கலத்தில் பள்ளி ஒன்றில் சத்துணவு சமையலராக பணியாற்றி வந்தார். இவருக்கு 10 வயதில் ஒரு மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர் என்பதும் தெரிய வந்தது.
இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.