Breaking News
recent

ரஷ்ய விமான விபத்து: பலியான 62 பேரில் 2 பேர் இந்தியர்கள் என தகவல்.!


துபாய் நாட்டில் இருந்து ரஷியாவுக்கு சென்ற ‘பிளை துபாய்’ விமானம் ராஸ்டோவ்-ஆன்-டான் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போயிங் 737-800 ரகத்தை சேர்ந்த அந்த ஜெட் விமானம், ரஷியா நாட்டின் தென்பகுதியில் உள்ள ராஸ்டோவ்-ஆன்-டான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விபத்தில் சிக்கியது.  

கடுமையான பனிமூட்டத்தால் ஓடுபாதை தெளிவாக தெரியாத காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.இவ்விபத்தையடுத்து, விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் வந்த 55 பயணிகள், விமானி உள்ளிட்ட 7 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 62 பேர் இந்த விபத்தில் பலியாகினர். பலியான 62 பேரில் இந்தியர்கள் இருவர் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 44 ரஷ்யர்கள், 8 உக்ரைன் நாட்டு மக்கள், ஒருவர் உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. விமான சிப்பந்திகள் 7 பேரில் 6 பேர் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன.


தகவல்-https://www2.flydubai.com/en/emergency/latest-updates/2016-03-19-Statement-2-relating-to-flydubai-flight-FZ981
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.