Breaking News
recent

மே 25ல் தமிழக வீரர்கள் பங்கேற்கும் யுஏஇ அளவிலான பேட்மிண்டன் இறுதி போட்டி.!


துபாயில் சென்ற வாரம் அமீரக அளவிலான பேட்மிண்டன் போட்டிகள் தொடங்கியது .இதன் இறுதி போட்டிகள் வரும் மே 25வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.  

குட்வில் விளையாட்டு கிளப் சார்பில் நடைபெற்ற‌ இப்போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர்களான பிரைம் ஸ்டார் ரவி சையத் அலி, நஜிர், நிஷார் அலி, பைஜீர் அலி  உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

துபாய் விளையாட்டு கவுன்சில்  அனுமதியுடன் துவங்கிய இப்போட்டிகள், துபாய் அல் தவார் விளையாட்டு மையத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் நடைபெற்றது. 

இப்போட்டிகளில் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் வரும் 25ந்தேதி வெள்ளிக்கிழமை  துபாய் அல் தவார் விளையாட்டு மையத்தில் இறுதி போட்டிகளில் மோத உள்ளது. 


இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப் பரிசும், சிறப்புக் கோப்பையும் வழங்கப்படும். அமீரகத்தில் உள்ள தமிழக வீரர்களும் இதில் பங்கேற்றனர். ஊடகத்திற்கான ஆதரவை  தினகரன் நாளிதழும் ,ரேடியோ  துபாய் தமிழ் எப் எம் 89.4 Tamil 89.4 FM ஆகியவை வழங்கியது
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.