Breaking News
recent

ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் 'ஈ': பயணி புகார்..!


காத்மாண்டுவில் இருந்து கொல்கத்தா வந்த ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் ஈ இறந்து கிடந்ததாக பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று சனிக்கிழமை கொல்கத்தாவுக்கு கிளம்பியது. 

அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் ஈ இறந்து கிடந்ததாக பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து ஏர் இந்தியா கூறுகையில்,
உணவில் ஈ இருந்ததாக கூறிய பயணி அதை சோதனைக்காக அளிக்கவில்லை.

 ஈ இருந்ததா என்பதை கண்டறிய அந்த உணவை திருப்பி அளிக்குமாறு கேட்டும் பயணி அளிக்கவில்லை. அதனால் உணவில் ஈ இருந்ததை உறுதிப்படுத்த முடியாது என்றது.

முன்னதாக கடந்த மாதம் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் உணவில் பல்லி கிடந்ததாக புகார் எழுந்தது. 

ஆனால் அந்த புகார் பொய் என்று ஏர் இந்தியா அதிகாரிகள் கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.