Breaking News
recent

சவுதி அரேபியாவில் தப்பி ஓடிய தீவிரவாதி சுட்டுக்கொலை.!


சவுதி அரேபியாவில் மெக்கா மாகாணத்தில் உள்ள டேய்ப் நகரில், ஒரு வீட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவு தகவல்கள் கிடைத்ததின் பேரில், போலீசார் அந்த வீட்டை கடந்த வெள்ளிக்கிழமை சுற்றி வளைத்தனர். 

அங்கு 3 தீவிரவாதிகள் பிடிபட்டனர். ஏராளமான தளவாடங்கள் கைப்பற்றப்பட்டன.

இருப்பினும் யூசுப் அப்துல் லத்தீப் ஷபாப் என்ற தீவிரவாதி மட்டும் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி ஓடி விட்டார்.

அவர் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஒரு மறைவிடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று, அவரை சரண் அடையுமாறு கூறினர். 

ஆனால் அவர் சரண் அடைய மறுத்து போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டார். போலீசாரும் திருப்பி சுட்டனர்.

இறுதியில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.