Breaking News
recent

சஹர் உணவு உட்கொண்டு நோன்பு நோற்ற திருமாவளவன்....!!


சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ஜும்ஆ பள்ளியில் இன்று அதிகாலை 3 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முன்னணி தலைவர் ப.அப்துல் ரஹ்மான் அவர்களும், 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும் ஒன்றாக அமர்ந்து சஹர் உணவு உட்கொண்டு நோன்பு வைத்த உன்னத நிகழ்வு....

பொதுவாக அரசியல்வாதிகளை பொறுத்தவரை நோன்பு நோற்காமலேயே இஃப்தார் என்னும் புனித நிகழ்வை அரசியலுக்காக பயன்படுத்தி இஃப்தாரின் புனிதத்தை கெடுத்து விட்டார்கள்.

நோன்பு வைக்காமலேயே இஃப்தாரில் கலந்து கொள்வது நோன்பாளியின் புனிதத்தையும், நோன்பின் மாண்பையும் கெடுப்பதற்கு சமம்,

அப்படிப்பட்ட அரசியல்வாதிகளில் மிகவும் மாறுதலாக நானும் உங்களுடன் நோன்பு நோற்கிறேன் என்று அதிகாலை 3 மணிக்கு சஹர் உணவு உட்கொண்டு முழுமையாக நோன்பு நோற்கும் உன்னத மனிதர் திருமாவளவன்,

இந்த ஆண்டுமட்டுமல்ல, பல ஆண்டுகளாக திருமாவளவன் நோன்பு நோற்று வருகிறார்.

சஹர் உணவு உட்கொள்வதர்காக திருமாவளவன் பள்ளிவாசலுக்கு வந்தார், பள்ளிவாசலில் இருந்தவர்கள் திருமாவளவனுக்கு சாப்பாட்டுடன் அன்பு பாசத்தையெல்லாம் பரிமாறிய விதம் அனைவரையும் சிலிர்க்க வைத்தது,

சாதிய மதவாத சக்திகள் பார்த்திருந்தால் நிச்சயமாக எண்ணியிருப்பார்கள் சாதி செத்து விட்டதோ சமத்துவம் வென்று விட்டதோ என்று.... 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.