பொதுவாக தனது நாட்டில் தேசத் தலைவர்கள் இறந்துபோனால் அந்நாடு, தனது நாட்டின் தேசியக் கொடியை
அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது வழக்கம். ஆனால் ஒரு இந்தியரான ஏ.பி .ஜே.அப்துல் கலாம் அவர்களின் மறைவையொட்டி அமெரிக் காவின் தேசிய கொடி அறைக்கம்பத்தில் பறக்க விட்டிருக்கிறார்கள். என்றால் அது இந்த இந்தியாவிற்கே கிடைத்த கௌரவம்.
ஆம்! அப்துல்கலாம் அவர்களை மறைவை முன்னிட்டு அவருக்கு மரியா தை செலுத்தும்வகையில் அமெரிக்க
வெள்ளைமாளிகையில்அந்நாட்டின் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப் பட்டிருந்தது. உலகளாவிய தலைவராக அப்துல் கலாமை அங்கீகரிக்கும் விதமாகவே இது அமைந்துள்ளது.
உனது பிறப்பு ஒருசம்பவ மாக இருக்கலாம் ஆனால் உன் இறப்பு ஒரு சரித்திர மாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி கலாம் கூறி வருவார். அவர் பிறந்தது என்னமோ ராமேஸ்வரத்தில் என்றாலும் இன்று அவர் இறந்தபிறகு இந்த உலகமே அவருக்காக கண்ணீரில் மூழ்கி தவிக்கிறதே!
கலாம், தான் சொன்னது போலவே வாழ்ந்து காட்டிய மாமனிதரை வணங்குவோம். போற்றுவோம். அவர் வழி நடந்திட உறுதி ஏற்போம்.
வாழ்க அப்துல் கலாம் அவர்களது நாமம், வளர்க அவரது புகழ்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக