ஆம்பூரைச் சேர்ந்த பழனி என்பவரின் மனைவி பவித்ரா காணாமல் போன வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆம்பூர் இளைஞர் ஷமீல் அகமது கடந்த 26ம் தேதி சென்னையில் உயிரிழந்தார்.
இதைக் கண்டித்தும், அவரது உயிரிழப்புக்கு காரணமான காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்தது.
இதில் போலீசார் உள்பட பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். பொதுமக்களின் சொத்துகளும் சூறையாடப்பட்டதோடு, போக்குவரத்து வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 130-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஷமீல் அகமது வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், வேலூர் மாவட்டம் வள்ளிமலை அருகே காணாமல் போனதாக
தேடப்பட்டுவந்த பவித்ராவை போலீசார் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மேல்பாடி காவல்நிலையத்தில்
வைக்கப்பட்டுள்ள அவரிடம் இத்தனை நாள் தலைமறைவாக இருந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக