சிறுபான்மை முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பர்மாவை விட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
உலகையே நெஞ்சை பிளக்க செய்யும் அளவுக்கு வன்முறை வெறியாட்டம் தாண்டவம் ஆடியுள்ள நிலையில் இதுவரை எந்த ஊடகமும் போதிய அளவில் வாய் திறக்கவில்லை.
பர்மாவில் நடந்து வரும் இனப்படுகொலை ஊடகங்களால் திட்டமிட்டு மூடிமறைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி பர்மாவில் நடைபெறும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் தம்முடைய முகநூல் பக்கத்தின் புரஃபைல் பிக்சரிலும் பர்மாவில் நடைபெறும் இனப்படுகொலையை நிறுத்த வேண்டும் என்ற வாசகம் அடங்கிய படத்தையும் வைத்து தொடர்ந்து பர்மா சம்பந்தமாக வலியுறுத்தி வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக