Breaking News
recent

வி.களத்தூர் அருகே உள்ள தைக்காலில் நகை கொள்ளை.!


வி.களத்தூர் அருகே தைக்காலில் விவசாயி வீட்டில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த.

நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

வி.களத்தூர் அருகே உள்ள தைக்காலில் வசிப்பவர் யூனுஸ்கான் (வயது 55). விவசாயி. 

இவர் நேற்றிரவு தனது குடும்பத்தினருடன் வீட்டின் தூங்கினார்.

பின்னர் இன்று காலை கண் விழித்த போது வீட்டின் பின் பக்க கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள் அறைக்கு சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது.

மேலும் அதில் இருந்த அனைத்து பொருட்களும் சிதறி கிடந்ததுடன் அங்கிருந்த 6 பவுன் நகையும் மாயமாகி இருந்தது. 

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் கை ரேகை நிபுணர்களும், மோப்ப நாய் சோதனையும் நடத்தப்பட்டது.இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.