Breaking News
recent

துபாயில் ரூ.1 லட்சத்துக்கு விற்கப்பட்ட மனைவி: கணவர் புகார்.!


துபாயில் மருத்துவ உதவியாளராக பணியாற்றச் சென்ற தனது மனைவியை, வேலைக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட் வேறொருவரிடம் ரூ.1 லட்சத்துக்கு விற்று விட்டதாக குடியாத்தத்தைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கள்ளியாம்மன்பட்டியைச் சேர்ந்த அலிபாபா என்பவர் கொடுத்துள்ள புகார் மனுவில், தனது மனைவி சஜீனா பானு, வேலைக்காக துபாய் சென்றார்.

ஆனால், அவரை வேலைக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட், அவரை வேறொருவரிடம் ரூ.1 லட்சத்துக்கு விற்று விட்டதாகவும், அந்த நபர், தனது மனைவியை துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

விரைவில் தனது மனைவியை மீட்டுத் தருமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.