Breaking News
recent

மண்ணடியில் தவ்ஹீத் ஜமாத்தினர் திரண்டதால் பெரும் பரபரப்பு.!



'மதீனா டூம் - நபிகள் நாயகத்தின் கட்டளைக்கு மாறு செய்து எழுப்பப்பட்டது' என்ற கருத்தை சமீபத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை தலைவர் செய்யது இப்ராஹீம் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் இவரது கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை மண்ணடி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தை முற்றுகையிடப் போவதாக சுன்னத் ஜமாத் அமைப்பை சேர்ந்த சேக் அப்துல்லா ஜமாலி சார்பில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் மண்ணடி பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் பெரும் திரளாக கூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.