Breaking News
recent

துபாயில் 40-வது மாடியிலிருந்து கிழே விழும்போது வீடியோ எடுத்த ஐ-போன்: சேதமடையாமல் தப்பிய அதிசயம்- (வீடியோ இணைப்பு)



40-வது மாடியிலிருந்து கை தவறி கிழே விழும்போது விடியோ எடுத்தது மட்டும் அல்லாமல், சேதமடையாமல் ஐ-போன் ஒன்று தப்பிய அதிசயம் துபாயில் நடந்துள்ளது.

துபாயை சேர்ந்தவர் புகைப்பட கலைஞர் காடலின் மாரின். சமீபத்தில் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் 40-வது மாடியில் இருந்து மேக மூட்டங்களை புகைப்படம் எடுக்கும் போது அவரது ஐ-போன் தவறி கிழே விழுந்துவிட்டது. கையில் இருந்து தவறி தரையில் விழுந்தாலே பல போன்கள் உடைந்து விடுகின்றன.

காடலின் மாரினும் தன்னுடைய போன் சுக்குநூறாக உடைந்து போயிருக்கும் என்று தான் நினைத்தார். ஆனால் நடந்ததோ வேறு அந்த போன் முழுமையாக இருந்ததுடன் மட்டும் அல்லாமல் தரையை அடையும் வரை வீடியோவும் எடுத்துள்ளது. உங்களால் நம்பமுடியவில்லையா? வீடியோவை பார்த்து மகிழுங்கள்... 




VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.