Breaking News
recent

திருச்சியில் நடக்கிறது சகோதரத்துவ மாநாடு -அறிவகம் சார்பில் ஏற்பாடு !!



தேனீ மாவட்டம் முத்துதேவன் பட்டியில் இயங்கி வருகிறது  அறிவகம் எனப்படும் இஸ்லாமிய அழைப்பு மையம் .இங்கு புதிதாக இஸ்லாமிய மார்கத்தை  ஏற்கும் சகோதரர்களுக்கு உணவு,உடை ,உறைவிடம் உள்ளிட்ட வசதிகள் உட்பட   மார்க்க கல்வி , உலககல்வி , உள்ளிட்ட நல்லொழுக்க பயிற்சி முகாம்களும் கற்றுகொடுக்கப்பட்ட்டு வருகிறது . 

பல்வேறு சமூக பணிகளை நடத்தி வரும் அறிவகம் ,வருகின்ற டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் திருச்சியில் சகோதரத்துவ மாநாட்டை நடத்தவிருக்கிறது .

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புகழ் பெற்ற மார்க்க அறிஞர்கள் ,உலமாக்கள் ,தாயீக்கள்,உட்பட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர் . 

இது தொடர்பாக பாப்புலர் பிரண்ட்ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் குறியாவது  இந்த மாநாடானது முழுக்க முழுக்க மாற்று மத சகோதரர்களிடம்  சகோதரத்துவத்தை  போதிப்பதற்காகவே நடத்தபடுகிறது.

அதற்காகத்தான் சகோதரத்துவ மாநாடு என்று தலைப்பே வைத்துள்ளோம் என்று கூறினார் . மேலும் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஆகியவை நடைபெற உள்ளதாகவும்  அபூபக்கர் சித்திக் தெரிவித்தார் .










VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.