பல்வேறு சமூக பணிகளை நடத்தி வரும் அறிவகம் ,வருகின்ற டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் திருச்சியில் சகோதரத்துவ மாநாட்டை நடத்தவிருக்கிறது .
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புகழ் பெற்ற மார்க்க அறிஞர்கள் ,உலமாக்கள் ,தாயீக்கள்,உட்பட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர் .
இது தொடர்பாக பாப்புலர் பிரண்ட்ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் குறியாவது இந்த மாநாடானது முழுக்க முழுக்க மாற்று மத சகோதரர்களிடம் சகோதரத்துவத்தை போதிப்பதற்காகவே நடத்தபடுகிறது.
அதற்காகத்தான் சகோதரத்துவ மாநாடு என்று தலைப்பே வைத்துள்ளோம் என்று கூறினார் . மேலும் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஆகியவை நடைபெற உள்ளதாகவும் அபூபக்கர் சித்திக் தெரிவித்தார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக