Breaking News
recent

துபாயில் கடலுக்கடியில் எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் துவக்கம்!



பிரபல எலக்ட்ரானிஸ் நிறுவனமான சோனி தனது புதிய எக்ஸ்பீரியா ஆகுவாடெக் ஷோரூமை துபாயில் கடலுக்கடியில் திறக்கப்பட்டது. கடந்த வாரம் சோனி நிறுவனத்தின் போட்டிகளில் பங்கேற்று பரிசு குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள்,பத்திரிக்கையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மட்டும் அழைத்து செல்லப்பட்டனர். 
கடலுக்கடியில் பொருள்களை காண்பது வித்தியாச அனுபவம் என அங்கு வந்த பிரமுகர்கள் கூறினர்.குறிப்பிட்ட நாட்களுக்கும் மட்டும் இந்த ஷோரூம் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த ஷோரூமில் சோனி நிறுவனம் தனது புது அறிமுகமான தண்ணீரால் பாதிப்பு ஏற்பட்டாத வாட்டர் ரெசிஸ்டண்ட் ஸ்மார்ட் போன், டேப்லட் மற்றும் இன்ன பிற சாதனங்களையும் அறிமுகபடுத்தியுள்ளது.
துபாய் கடல் பகுதியில் குறிப்பிட்ட தூரத்தில் கடலின் அடியில் இதன் ஷோரூம் அமைக்கப்பட்டு ஷோரூம் அமைந்திருக்கும் பகுதிக்கு படகுகள் மூலம் வாடிக்கையாளர்கள் அழைத்து செல்லப்படுவார்கள். 
பின்னர் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யோக நீச்சல் உடை அணிவிக்கப்பட்டு நீச்சல் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் திறம்பட பயிற்சி பெற்ற வல்லுநர்களில் வழிகாட்டுதலில் கடலுக்கு அடியில் உள்ள ஷோரூமிற்கு பொருட்களை காண்பத‌ற்கு செல்வார்கள்.
மேலும் இந்த ஆகுவாடெக் ஷோரூமில் வாடிக்கையாளர்களார் வழக்கம் போல இயல்பாக மூச்சு விடவும், கடல்தரையில் எளிதாக நின்று பொருட்களை காணவும், வாங்கவும் இயலும் எனவும் அதற்கேற்ப விற்பனைமுறை, பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
இம்முயற்சி வியாபார உலகில் புரட்சி ஏற்படுத்தும் என சோனி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் வாடிக்கையாளர்கள் அனைவரும் செல்லும் வகையில் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என தெரிகிறது



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.