வி.களத்தூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக இன்று ஞாயிற்றுக் கிழமை (23-11-2014) மாலை 6 மணியளவில் சமூக எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இராமநாதபுரம் தொகுதியின் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், தமுமுக வின் மூத்த தலைவருமான M.H.ஜவாஹிருல்லாஹ் MLA., அவர்களும் மற்றும் மாநில கழகப் பேச்சாளர் திருச்சி.J.முஹம்மது ரபீக் அவர்களும் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர்.
முன்னதாக ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள் வி.களத்தூர் தமுமுக கிளை அலுவலகத்தை திறந்து வைத்து கழக கொடியேற்றினார், பின்பு ஜாமிஆ பள்ளிவாசலில் நடைபெற்ற ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது பிறகு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக