துபாயில் 2015ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 1 வரை "துபாய் ஷாப்பிங் திருவிழா" நடைபெற உள்ளது.இதனையோட்டி துபாயின் 500க்கும் மேற்பட்ட முண்ணனி தங்க நகை நிறுவனங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள்,
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இணைந்து உலகின் நீளமான தங்க சங்கிலியை தயாரித்து வருகின்றனர். இதன் நீளம் சுமார் 5 கிலோ மீட்டருக்கு மேலாகவும் இதற்காக 160லிருந்து 200 கிலோ தங்கம் வரை பயன்படுத்தப்படலாம.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான முழுமையாக நிறைவு பெற்று ஜனவரி 2ம் தேதி மக்கள் பார்வைக்கு வைக்கபடும் எனதுபாய் ஷாப்பிங் திருவிழா அமைப்பாளர்கள் இத்தகவலை வெளியிட்டனர்.
ஜனவரி தொடங்கி ஒரு மாதம் நடைபெற உள்ள துபாய் ஷாப்பிங் திருவிழாவையோட்டி 100 கிலோ தங்கம் குலுக்கல் முறையில் வாடிக்கையாளார்களுக்கு பரிசளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக